இன்று காலை பொலன்னறுவை - மட்டக்களப்பு வீதியில் மன்னம்பிட்டி, ஆச்சி போக்குவ பிரதேசத்தில் டிப்பரொன்றும், முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்த நபருமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.
படுகாயமடைந்த பெண் பொலன்னறுவை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதுடன், டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு